புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஆக., 2013

சொத்து குவிப்பு வழக்கு: பொன்முடி ஆஜராகவில்லை
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தி.மு.க. முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 


இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வெள்ளிக்கிழமை இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது.

வழக்கு விசாரணையில் முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் ஆஜராகவில்லை. சொந்த வேலை காரணமாக அவர்கள் ஆஜராகவில்லை என்று தி.மு.க. சார்பில் வக்கீல்கள் ஆஜராகி மனு அளித்தனர். 
வழக்கை நீதிபதி வெற்றிச்செல்வி விசாரித்தார். இந்த வழக்கை செப்டம்பர் 20–ந் தேதி தள்ளிவைத்து உத்தரவிட்டார். விழுப்புரம் கோர்ட்டில் பொன்முடி சார்பில் இன்று தி.மு.க. வக்கீல்கள் டி.எஸ்.சுப்பிரமணியம், கல்பட்டு ராஜா, சுரேஷ், கோதண்டம் ஆகியோர் ஆஜரானார்கள்.

ad

ad