புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 ஆக., 2013

முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை முறையிட்ட கூட்டமைப்புக்கு பாராட்டு 
இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக அரசின் அனுமதியுடன் பெளத்த மத தீவிரவாத அமைப்புகளால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள தாக்குதல்கள், நடவடிக்கைகள் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று முறையிட்டுள்ளது.

 
இந்த முறைப்பாட்டை தன்னிடம் தெரிவித்தமைக்காக கூட்டமைப்புக்கு நவநீதம்பிள்ளை பாராட்டுத் தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருடன் நேற்றுக் கொழும்பில் நடத்திய சந்திப்பின்போதே முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துக் கூறியுள்ளது.
 
இதுதொடர்பில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவிக்கையில்,
இலங்கையில் முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை, முஸ்லிம் பெண்களின் பர்தா உடை பிரச்சினை தொடர்பில் நவநீதம்பிள்ளையிடம் விளக்கமளித்தோம்.
 
அதற்கு பதிலளித்த நவநீதம்பிள்ளை, ''முஸ்லிம் மக்கள் பிரச்சினை குறித்து நீங்கள் என்னிடம் கூறியமைக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். அவர்களுடைய பிரச்சினையை பேசுவதற்கு யாரும் முன்வராத நிலையில் நீங்கள் இதனை என்னிடம் தெரிவித்தமைக்கு  நான் பாராட்டுகிறேன்'' என்று கூறினார் என்றனர்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=349972268731688986#sthash.NXp40RQT.dpuf

ad

ad