புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஆக., 2013

கொன்று விடுங்கள்! பாகிஸ்தான் சிறையில் இருக்கும் இந்திய கைதிகள் இரு நாட்டு அரசுகளுக்கும் கடிதம்!
பாகிஸ்தானில் ஹோஷியார்பூர் கோட் லக்பாத் சிறையில் இந்திய தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 11 கைதிகள், தங்களை சுட்டுக் கொன்று விடுங்கள் என உருக்கமாக இந்தியா மற்றும்
பாகிஸ்தான் அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதியுள்ளனர்.

கிர்பால் சிங், குல்தீப் சிங், தரம் சிங், முகமது பரீத், திலக் ராஜ், மக்பூல் லோக், அப்துல் மஜீத், சம்புநாத், மொஹிந்தர் சிங், சுராஜா ராம், பன்வாசி ஆகிய 11 கைதிகள், "தினம் தினம் இந்தச் சிறைச்சாலையில் கொடுமைகளை அனுபவித்து வருகிறோம். மனவேதனையுடன் தண்டனையை கழிப்பதற்கு பதிலாக அனைவரும் செத்து மடிவதை விரும்புகிறோம். எங்களை சுட்டுக் கொன்று விடுங்கள்' என இந்திய, பாகிஸ்தான் அரசுகளை அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் இந்திய அரசுக்கு எழுதிய கடித நகலை மாநிலங்களவை பாஜக எம்.பி.கண்ணா செய்தியாளர்களிடம் வெளியிட்டார்.
அந்தக் கடிதத்தில் மேலும் 4 பெண்கள் உள்பட 21 பேர் மன உளைச்சலில் உள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது. இதுதொடர்பாக நாடாளுமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்போவதாகவும் கண்ணா தெரிவித்தார். லாகூர் சிறையில் இருந்த சரப்ஜித் சிங் சிறையிலேயே அடித்துக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் சிறைகளில் தற்போது 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

ad

ad