புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 செப்., 2013

வீட்டில் வேலை பார்க்கும் 10 பேருக்கு சொந்த செலவிலேயே வீடுகள் கட்டி கொடுக்கிறார் நடிகர் அஜீத்
    டிகர் அஜீத்திடம் நீண்டகாலமாக சமையல் வேலை, வீட்டு வேலை, தோட்ட வேலை செய்யும் 10 ஊழியர்களுக்கு சொந்தமாக வீடு இல்லை. 


இது பற்றிய தகவல் தெரிந்ததும் அவர்களுக்கு உதவ அஜீத் முடிவு செய்தார். இதற்காக பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள கேளம்பாக்கத்தில் நிலம் வாங்கினார். அந்த நிலம் வீட்டில் பணியாற்றும் 10 பேர் பெயருக்கும் தனித்தனியாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது.
இதில் 10 பேருக்கும் அஜீத் சொந்த செலவிலேயே வீடுகள் கட்டி கொடுக்கிறார். இதற்கான பூமி பூஜை சமீபத்தில் நடந்தது. அஜீத் படப்பிடிப்புக்காக ஐதராபாத் சென்று இருந்ததால் பூமி பூஜையில் அவரது மனைவி ஷாலினி கலந்து கொண்டார். விரைவில் வீட்டுக்கான கட்டுமான பணிகள் துவங்க உள்ளன.
நடிகர் அஜீத் விளம்பரம் இல்லாமல் நலிந்தோர் பலருக்கு உதவிகள் செய்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக தங்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க முடிவு செய்துள்ளார். வேலை செய்கிறோம் சம்பளம் தருகிறார். அதையும் தாண்டி வீடு கட்டி கொடுக்கிறார் என்றால் நாங்கள் என்ன பிரதிபலன் செய்யப்போகிறோமோ என்று கண்ணீருடன் கூறினர் ஊழியர்களும், அவர்களது குடும்பத்தினரு

ad

ad