புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 செப்., 2013

முல்லைத்தீவில் 21 வயது இளம் பெண் சடலமாக மீட்பு
முல்லைத்தீவில் 21 வயதான இளம் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டதாக முள்ளியவளைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
லோகேந்திரன் நிஸானி ( 21 வயது) என்ற இளம் பெண்ணே நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
முள்ளியவளைப் பொலிஸ் பிரிவிலுள்ள நீராவிப்பிட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள அவரது வீட்டிலிருந்தே சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இளம் பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மாஞ்சோலை வைத்தியசாலை ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அப்பெண் உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனத் தெரிவித்த முள்ளியவளைப் பொலிஸார், இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ad

ad