தீவுப்பகுதி மக்களுக்கு அன்பான வேண்டுகோள் -ஐரோப்பிய தீவுப்பகுதி மக்கள் ஒன்றியம்
எதிர்வரும் 21 ஆம் திகதி வடமாகாண சபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் நீங்கள் என்ன செய்ய போகின்றீர்கள்? காலாகாலமாக தீவுப்பகுதி மக்கள் அரசியலில் தமிழ் தேசியத்தோடு ஒருசேர இணைந்து நின்றவர்கள். ஆதி முதல் தமிழ் காங்கிரஸ்.தமிழரசு கட்சி,தமிழர் விடுதலை கூட்டணி என்பவற்றை ஆதரித்து ஜனநாயக தேர்வுகளுக்கு உறுதியோடு இறுதி வரை இருந்தவர்கள். காலத்தில் கோலமாய் எதிரிகளோடு துரோகிகளும் சேர்ந்து துப்பாக்கி முனையில் எம்மை ஆள வந்து குடி கொண்ட பின்னர் எமது கோட்டை சரிந்தது இல்லை இல்லை சரியவைத்தார்கள். வன்முறை.துப்பாக்கி கலாசாரம்.தப்பான தேர்தல் நடைமுறை என எல்லாவற்றையும் பயன் படுத்தி எதிரி வென்றுள்ளதாகவோ பெரும் பான்மை பெற்றதாகவோ கொக்கரித்தான் .சிலவேளைகளில் தேசியம் சார்ந்தவர்கள் பகிஸ்கரிப்பு செய்ததாலும் இது நடக்க வாய்ப்பு கிட்டியது . இப்போது நல்ல காலம் கை கூடி வந்துள்ளது.இப்போது கூட தீவுப்பகுதியில் எதிரியின் ஆயுத கலாசாரம் நிலவுவதால் சரியான முறையில் தேர்தல் பிரசாரமோ பரப்புரையோ செய்ய முடியாத நிலைதானுண்டு. என்ன தான் இருந்தாலும் இந்த அரிய வாய்ப்பினை பயன் படுத்தி எத்ரியை தோற்கடிக்க முன்வாருங்கள்.எமது இனப் பிரச்சினைஐ நா மன்றம் வரை போயிருக்கும் இவ்வேளையில் நீங்கள் துப்பாக்கி அடக்கு முறைக்கு அச்சம் கொள்ளாதீர்கள்.ஜனநாயக வாக்கெடுப்பில் கலந்து கொள்ள வேண்டும். வாக்களிக்கா விட்டால் கூட உங்கள் வாக்குகள் களவாடப் பட்டு எதிரி வாக்குககளாக மாறும்.எதிரி வியூகத்துக்கு அஞ்சாமல் வாக்களியுங்கள்,தேர்தல் வாக்களிப்பு முறை ரகசியமானது.எதிரிக்கு ஒரு முகத்தையும் வாக்களிப்பில் மறு முகத்தையும் காட்டி எமது தேசியத்துக்கு வழி கோலும் தமிழ் தேசிய கூட்டமைப்பை வெல்ல வையுங்கள்.இல்லை இல்லை அதிக பெரும்பான்மை பெற உதவுங்கள் மாற்றானை ஆதரிக்காத எங்கள் மண் (முன்னரைபோல) என்று நிரூபியுங்கள்.எதிரி பதவிகள் பட்டங்கள் வசதிகள் செய்து தருகிறான் என்று ஏமாறாதீர்கள்.அந்த சேவைகள் எல்லாம் ஒரு அரசாங்கம் தங்கள் நாட்டு மக்களுக்கு செய்தே தான் ஆகவேண்டும் .அவை எல்லாம் தங்கள் சட்டைக்குள் இருந்து எடுக்கும் பணத்தின் மூலம் செய்வதில்லை.எல்லாம் பொது மக்களின் சொத்து தான் எல்லா அமைப்புகளும் கட்சிகளும் இயக்கங்களும் எதோ ஒரு வகையில் தவறு செய்து தானுள்ளன.சந்தர்ப்பம் சூழ்நிலை காரணமாக பிரிந்து போய் கிடந்த காலங்கள் அவை.இப்போது முதன் முறையாக அரச ஊதுகுழலான கட்சி ஒன்றை தவிர மற்றவை எல்லாம் தமக்குள்ளே ஒன்று பட்டு ஒரே குடையின் கீழ் உங்கள் முன் வந்துள்ளன.பழையவற்றை மறப்போம்.மண் ணுக்காக இனத்துக்காக குரல் கொடுக்கும் ஒரே கட்சி சின்னமான வீட்டுக்கு புள்ளடி இட்டு எமது இனத்தை மண்ணை காப்போமாக. இந்த வேண்டுகோளை வைக்க எங்களுக்கு உரிமையுண்டு.நாங்களும் உங்கள உறவுகள் ரத்தங்கள். பொருளாதார வளத்திலும் உங்களோடு ஒன்றாக இருப்பவர்கள் .எங்கள் இதய பூர்வமான இந்த வேண்டுகோளை ஏற்பீர்கள் என் நம்புகிறோம்
நன்றியோடு 18.09.2013
ஐரோப்பிய தீவுப்பகுதி மக்கள் ஒன்றியம்
தலைமையகம் சுவிட்சர்லாந்து
tthamil 8@gmail .com
எதிர்வரும் 21 ஆம் திகதி வடமாகாண சபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் நீங்கள் என்ன செய்ய போகின்றீர்கள்? காலாகாலமாக தீவுப்பகுதி மக்கள் அரசியலில் தமிழ் தேசியத்தோடு ஒருசேர இணைந்து நின்றவர்கள். ஆதி முதல் தமிழ் காங்கிரஸ்.தமிழரசு கட்சி,தமிழர் விடுதலை கூட்டணி என்பவற்றை ஆதரித்து ஜனநாயக தேர்வுகளுக்கு உறுதியோடு இறுதி வரை இருந்தவர்கள். காலத்தில் கோலமாய் எதிரிகளோடு துரோகிகளும் சேர்ந்து துப்பாக்கி முனையில் எம்மை ஆள வந்து குடி கொண்ட பின்னர் எமது கோட்டை சரிந்தது இல்லை இல்லை சரியவைத்தார்கள். வன்முறை.துப்பாக்கி கலாசாரம்.தப்பான தேர்தல் நடைமுறை என எல்லாவற்றையும் பயன் படுத்தி எதிரி வென்றுள்ளதாகவோ பெரும் பான்மை பெற்றதாகவோ கொக்கரித்தான் .சிலவேளைகளில் தேசியம் சார்ந்தவர்கள் பகிஸ்கரிப்பு செய்ததாலும் இது நடக்க வாய்ப்பு கிட்டியது . இப்போது நல்ல காலம் கை கூடி வந்துள்ளது.இப்போது கூட தீவுப்பகுதியில் எதிரியின் ஆயுத கலாசாரம் நிலவுவதால் சரியான முறையில் தேர்தல் பிரசாரமோ பரப்புரையோ செய்ய முடியாத நிலைதானுண்டு. என்ன தான் இருந்தாலும் இந்த அரிய வாய்ப்பினை பயன் படுத்தி எத்ரியை தோற்கடிக்க முன்வாருங்கள்.எமது இனப் பிரச்சினைஐ நா மன்றம் வரை போயிருக்கும் இவ்வேளையில் நீங்கள் துப்பாக்கி அடக்கு முறைக்கு அச்சம் கொள்ளாதீர்கள்.ஜனநாயக வாக்கெடுப்பில் கலந்து கொள்ள வேண்டும். வாக்களிக்கா விட்டால் கூட உங்கள் வாக்குகள் களவாடப் பட்டு எதிரி வாக்குககளாக மாறும்.எதிரி வியூகத்துக்கு அஞ்சாமல் வாக்களியுங்கள்,தேர்தல் வாக்களிப்பு முறை ரகசியமானது.எதிரிக்கு ஒரு முகத்தையும் வாக்களிப்பில் மறு முகத்தையும் காட்டி எமது தேசியத்துக்கு வழி கோலும் தமிழ் தேசிய கூட்டமைப்பை வெல்ல வையுங்கள்.இல்லை இல்லை அதிக பெரும்பான்மை பெற உதவுங்கள் மாற்றானை ஆதரிக்காத எங்கள் மண் (முன்னரைபோல) என்று நிரூபியுங்கள்.எதிரி பதவிகள் பட்டங்கள் வசதிகள் செய்து தருகிறான் என்று ஏமாறாதீர்கள்.அந்த சேவைகள் எல்லாம் ஒரு அரசாங்கம் தங்கள் நாட்டு மக்களுக்கு செய்தே தான் ஆகவேண்டும் .அவை எல்லாம் தங்கள் சட்டைக்குள் இருந்து எடுக்கும் பணத்தின் மூலம் செய்வதில்லை.எல்லாம் பொது மக்களின் சொத்து தான் எல்லா அமைப்புகளும் கட்சிகளும் இயக்கங்களும் எதோ ஒரு வகையில் தவறு செய்து தானுள்ளன.சந்தர்ப்பம் சூழ்நிலை காரணமாக பிரிந்து போய் கிடந்த காலங்கள் அவை.இப்போது முதன் முறையாக அரச ஊதுகுழலான கட்சி ஒன்றை தவிர மற்றவை எல்லாம் தமக்குள்ளே ஒன்று பட்டு ஒரே குடையின் கீழ் உங்கள் முன் வந்துள்ளன.பழையவற்றை மறப்போம்.மண் ணுக்காக இனத்துக்காக குரல் கொடுக்கும் ஒரே கட்சி சின்னமான வீட்டுக்கு புள்ளடி இட்டு எமது இனத்தை மண்ணை காப்போமாக. இந்த வேண்டுகோளை வைக்க எங்களுக்கு உரிமையுண்டு.நாங்களும் உங்கள உறவுகள் ரத்தங்கள். பொருளாதார வளத்திலும் உங்களோடு ஒன்றாக இருப்பவர்கள் .எங்கள் இதய பூர்வமான இந்த வேண்டுகோளை ஏற்பீர்கள் என் நம்புகிறோம்
நன்றியோடு 18.09.2013
ஐரோப்பிய தீவுப்பகுதி மக்கள் ஒன்றியம்
தலைமையகம் சுவிட்சர்லாந்து
tthamil 8@gmail .com