புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 செப்., 2013

நவநீதம்பிள்ளைக்கு பாராட்டு தெரிவித்த ஆளும் கட்சி அமைச்சர்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்த 6 விடயங்கள் தொடர்பில் அவருக்கு பாராட்டு கூறுவதாக அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையின் உபசரிப்பு, விடுதலைப்புலிகள் மிலேச்சத்தனமான கொலைகார அமைப்பு, வடக்கின் மீள்கட்டமைப்பு பணிகள், வடக்கு தேர்தல் நடத்தப்படுவது ஆகிய விடயங்கள் தொடர்பாக அவர் வெளியிட்ட கருத்துக்களுக்கு பாராட்டு தெரிவிக்கின்றோம்.

நவநீதம்பிள்ளை இலங்கை வருவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தமை மூலம் நாட்டில் ஜனநாயகம் பற்றிய செய்தி வழங்கப்பட்டுள்ளது என்றார்.
அதேவேளை அமைச்சர் மேர்வின் சில்வா, நவநீதம்பிள்ளையை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக தெரிவித்திருந்தமை பற்றி ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் அழகப்பெரும, அமைச்சரின் அந்த பேச்சு தொடர்பில் தாம் கவலையடைவதாக கூறினார்.
நவநீதம்பிள்ளை, எனது தாயின் வயதை விட இரண்டு வயது சிறியவர் அப்படியான ஒருவருக்கு திருமண யோசனையை முன்வைப்பது பெரும் தவறு எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இதனிடையே 1987 ஆம் ஆண்டுக்கு பின்னர் எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் யாழ்.தேவி ரயில் கிளிநொச்சி வரை தனது சேவை நடத்த உள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

ad

ad