புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 செப்., 2013


நான் அரசியல்வாதி இல்லை;எந்த அரசியல் கட்சியைச்சார்ந்தவனும் இல்லை: விஜய் பேட்டி
 



தலைவா திரைப்படத்தின் சிறப்பு நிகழ்ச்சி இன்று(9.9.2013) மாலை தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப் பானது. இப்படத்தில் நடித்த நடிகர் விஜய், நடிகை அமலாபால், படத்தின் இயக்குநர் விஜய், இசையமைப் பாளர் ஜி.வி.பிரகாஷ்
ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.


நிகழ்ச்சியில் விஜய்யிடம் கேட்கப்பட்ட கேள்விகளூக்கு அவர் எந்தவித தயக்கமும் இல்லாமல் பதில் அளித்தார். விஜய் அளித்த பதில்கள்:
தலைவா படம் தாமதமாகிக்கொண்டே சென்றபோது, ஏன் நீங்கள் மீடியாவை அழைத்துப் பேசவில்லை?
‘’தலைவா பட பிரச்சனையில் என் ரசிகர்களை நான் அமைதிகாக்குமாறு கேட்டுக்கொண்டிருந்தேன். அவர்களை அமைதிகாக்கச்சொல்லிவிட்டு நான் மீடியாவை அழைத்துப்பேசி, அந்த நேரத்தில் கோபமாக ஏதும் பேசிவிட்டால்....என்னாவது. எப்படியும் படம் ரிலீசாகிவிடும் என்று நம்பிக்கை இருந்தது. அதனால் தான் மீடியாவை சந்தித்து பேசவேண்டாம் என்று முடிவெடுத்தேன்.’’

தமிழகத்தில் ரிலீசாக தாமதம் ஆனாலும், பிறமாநிலங்களில் ரிலீசாகி வசூலை அள்ளியதே?
‘’ தலைவா படம் பிற மாநிலங்களில் ரிலீசாகி இதுவரை இல்லாத அளவிற்கு ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் தமிழகத்தில் பிரச்சனை இருந்ததால் அந்த சந்தோசத்தை முழுமையாக அனுபவிக்க முடியவில்லை.’’
தலைவா படம், அரசியலுக்கு சீக்கிரம் வந்துவிடுவீர்கள் என்பதை சொல்லாமல் சொல்கிறதா?
’’தலைவா படத்திலையும் நாங்க அதைப்பற்றி சொல்லவில்லை. நானும் அப்படிச்சொல்லவில்லை. நீங்களாகத்தான் சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். எனக்கு அரசியலில் ஆர்வம் இருக்கிறது. நான் அரசிய லுக்கு வரப்போகிறேன் என்று எங்கேயும் நான் சொன்னதில்லை. எனக்கு அரசியலில் ஆர்வமில்லை. சினிமாவில்தான் என் முழு கவனமும் இருக்கிறது. நான் அரசியல்வாதி இல்லை. எந்த அரசியல் கட்சியைச் சார்ந்தவனும் இல்லை. நான் எல்லோருக்கும் பொதுவான ஒரு நடிகன்.’’
கோபம்?
கோபப்படுவதால் பாசிட்டிவான எதுவும் நடக்கப்போவதில்லை. நேரம்தான் வேஷ்ட். அப்பறம் கோபப்படு வதில் என்ன அர்த்தம் இருக்கிறது.

வாழ்க்கையின் துயரமான நாள்?
என் வாழ்க்கையின் துயரமான நாள், தலைவா படத்தின் தாமதத்தால் ரசிகர் தற்கொலை செய்துகொண்ட நாள்தான்.

ad

ad