கிளிநொச்சி இராணுவ முகாமிற்குள் தேர்தல் சுவரொட்டிகள்! கண்காணிப்பு அமைப்பு குற்றச்சாட்டு
வட மாகாண சபைத் தேர்தலுடன் தொடர்புடைய ஒரு தொகை சுவரொட்டிகளை ஏற்றிய பாரஊர்தி ஒன்று கிளிநொச்சியில் உள்ள இராணுவ முகாம் ஒன்றினுள் அவற்றை கையளித்துள்ளதாக தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
அத்துடன் பளை இயக்கச்சியில் உள்ள இராணுவ முகாமில் விடுமுறையில் இருந்த இராணுவ வீரர்களின் தபால் மூலம் வாக்குகளை வேறு சிலர் பயன்படுத்தியிருப்பதாக தம்மிடம் முறைப்பாடு செய்ப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு மேலும் குறிப்பிட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டு சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவுக்கு தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
அத்துடன் தேர்தல் வன்முறை சம்பவங்களுக்கு இராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்படுகின்ற சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அந்த அமைப்பு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.