புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 செப்., 2013

வடமாகாணசபை உறுப்பினர் கஜதீபன் மீது ஈ.பி.டி.பியினர் ஊர்காவற்துறையில் தாக்குதல்


தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட வடமாகாணசபை உறுப்பினரும், யாழ்.மாவட்ட தமிழரசுக்கட்சி இளஞரணித்தலைவருமான பா.கஜதீபன் மீது ஊர்காவற்துறை கண்ணகியம்மன் இறங்குதறை பகுதியில் வைத்து ஈ.பி.டி.பியினர் கற்களை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். 

மக்கள் வழங்கிய தேர்தல் தோல்வியை சகிக்க முடியாத ஈ.பி.டி.பியினர் தீவுப்பகுதி மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதுடன் அங்கு சென்று வரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
கஜதீபனும் அவரது நண்பர்களும் இன்று 28.09.2013 அனலைதீவுக்கு விஜயம் செய்து தனக்கு வாக்களித்த மக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். சந்திப்பு முடிந்து திரும்பி வரும் போது இன்று மாலை ஊர்காவற்துறை கண்ணகியம்மன் இறங்குதுறை பகுதியில் வைத்து ஈ.பி.டி.பி யினரால் கற்களால் தாக்குதல் மேற் கொள்ளப்பட்டுள்ளது.

ad

ad