ஐ.நா. மனித உரிமை அவையில் இலங்கை தொடர்பாக அம்னஸ்டி இண்டர்நேஷனல் அறிக்கை தாக்கல்
ஐ.நா. மனித உரிமைகள் அவையின் 24வது கூட்டத்தொடர் இம்மாதம் 9ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதி வரை நடக்கிறது. இந்தக் கூட்டத்தொடரில் உலகத்தில் உள்ள பல்வேறு மனித உரிமை அமைப்புகள், இலங்கையில் நடந்த ராஜபக்சே அரசின் மனித உரிமைக்கு எதிரான நடந்துள்ள சம்பவங்கள் குறித்து தங்களது அறிக்கைகள் தாக்கல் செய்தது. உலகத்தின் மிகப்பெரிய மனித உரிமை அமைப்பான அம்னஸ்டி இண்டர்நேஷனலின் இந்தியப் பிரிவு ஒரு அறிக்கையை 24.09.2013 செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தது.