புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 செப்., 2013

வட மாகாண ஆளுனர் ஆளும் கட்சிக்காக பிரசாரம் செய்கின்றார்!– கீர்த்தி தென்னக்கோன்
வட மாகாண ஆளுனர் ஆளும் கட்சிக்காக பிரசாரத்தில் ஈடுபட்ட வருவதாக கபே என்ற தேர்தல் கண்காணிப்பு அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் குற்றம் சுமத்தியுள்ளார்.
தொழில் நியதிகள் மற்றும் தேர்தல் சட்டங்களை மீறி வட மாகாண ஆளுனர் ஜீ.ஏ. சந்திரசிறி செயற்பட்டு வருகின்றார்.
ஆளுனர் தேர்தல் பிரசாரப் பணிகளில் ஈடுபட விரும்பினால் ஆளுனர் பதவியை துறக்க வேண்டும்.
ஆளுனர் ஆளும் கட்சி தேர்தல் பிரச்சாரக் கூட்ட மேடைகளில் தோன்றகின்றார். இது அதிர்ச்சியையும் அருவருப்பையும் ஏற்படுத்துகின்றது.
வட மாகாண ஆளுனரின் நடவடிக்கை அரசியல் அமைப்பிற்கும் முரணானது.
மாகாணசபைகளின் நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்ட ஆளுனர் செயற்படும் விதம் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.
கௌரவமான பதவியை வகிக்கும் ஆளுனர் தேர்தலின் போது சுயாதீனமாக செயற்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

ad

ad