புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 செப்., 2013

யாரிடம் பதவிப் பிரமாணம் செய்வது என்பது குறித்து பரிசீலிக்கவுள்ளோம்: சீ.வி.விக்­னேஸ்வரன்
வட­மா­காண ஆளு­நரின் பதில் கிடைத்­ததும், முத­ல­மைச்சர் சத்­தி­யப்­பி­ர­மாண விட­யத்­தையும் அமைச்சர் வாரிய நிய­ம­னங்­களைப் பற்­றியும் பரி­சீ­லிப்போம். அவ­ரு­டைய பதிலுக்­காக காத்திருக்கின்றோம் என வடமாகாண முதலமைச்சர் வேட்பாளர் சீ.வி.விக்­னேஸ்­வரன் தெரி­வித்தார்.
அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,
வடக்குத் தேர்­தலில் கூட்­ட­மைப்பின் சார்பில் போட்­டி­யிட்டு வெற்­றி­யீட்­டிய 28 அங்­கத்­த­வர்­களும் ஏகமனதான தீர்­மா­னத்­துடன் என்னை முத­ல­மைச்­ச­ராக்கும் படி வட­மா­காண ஆளு­ந­ருக்கு உத்தியோகபூர்வ­மாக செய­லாளர் நாயகம் மாவை சேனா­தி­ராசா கடந்த செவ்­வாய்க்­கி­ழமை கடிதம் ஒன்றை அனுப்­பி­வைத்­துள்ளார்.
முத­ல­மைச்சர் நிய­ம­னத்­துக்­கான சிபா­ரிசை அனுப்­பி­ வைத்­துள்ளோம். முத­ல­மைச்சர் ஒருவர் யாரிடம் பத­விப் ­பி­ர­மாணம் செய்­ய ­வேண்­டு­மென்­பது மாகாண சபை சட்­டத்தில் தெளி­வாக சொல்­லப்­பட்டிருக்­கி­றது.
ஆளு­நரின் உத்­தி­யோ­க­பூர்வ பதில் கிடைத்­ததும் முத­ல­மைச்­ச­ராக எப்­பொ­ழுது சத்­தி­யப் ­பி­ர­மாணம் எடுப்பது? யாரிடம் எடுப்­பது என்­பது பற்றி பரி­சீ­லிக்­க­வுள்ளோம் எனக் கூறினார்.
யாழ். மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுரேஷ் பிரே­மச்­சந்­தி­ர­னிடம் இவ்­வி­டயம் குறித்து வினவியபோது, மாவை சேனா­தி­ராசா மூலம் எமது முத­ல­மைச்சர் நியமனத்துக்கான சிபா­ரிசை அனுப்­பி­ வைத்­துள்ளோம். முத­ல­மைச்சர் ஒருவர் யாரிடம் பத­விப் ­பி­ர­மாணம் செய்­ய­வேண்­டு­மென்­பது மாகா­ண­சபை சட்­டத்தில் தெளி­வாகச் சொல்­லப்­பட்­டி­ருக்­கி­றது.
தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பி­ன­ரா­கிய நாங்­களே யாரிடம் முத­ல­மைச்சர் பதவிப் பிர­மாணம் செய்ய வேண்­டு­மென தீர்­மா­னிக்க முடியும். ஜனா­தி­ப­தி­யி­டமோ அல்­லது ஆளுநரி­டமோ பதவிப் பிரமாணம் செய்­ய­வேண்­டு­மென்ற கட்­டாயம் இல்லை. சாதா­ரண சட்­டத்­த­ரணி ஒரு­வ­ரி­டமும் சத்­தி­யப் ­பி­ர­மா­ணத்தை மேற்­கொள்ள முடியும்.
2012 ஆம் ஆண்டும், 1989 ஆம் ஆண்டும் மாகா­ண­சபை முத­ல­மைச்­சர்கள் ஜனா­தி­ப­தி­யி­டமும் ஆளுநரிடமும் பதவிப் பிர­மாணம் மேற்­கொண்­டுள்­ளார்­களே என வின­வி­ய­போது 2012ஆம் ஆண்டு கிழக்கு மாகா­ண­ச­பையில் வென்­ற­வர்கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்பு என்ற கார­ணத்­தினால் அவர்கள் ஜனாதி­ப­தி­யிடம் பதவிப் பிர­மாணம் செய்­தார்கள்.

அதேபோல் 1989 ஆம் ஆண்டு வடக்கு, கிழக்கு மாகா­ண­ச­பையின் முத­ல­மைச்சர் ஆளுநர் முன் பதவிப் பிர­மாணம் செய்­தார்கள். ஆனால், அந்தத் தேவை வடக்கு மாகாணத்திற்கு தேவை­யில்லை. யாரிடம் பத­விப்­ பி­ர­மாணம் செய்­ய­ வேண்­டு­மென்­பதை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பி­ன­ரா­கிய நாங்­களே முடிவு செய்வோம் எனவும் குறிப்பிட்டார்.

ad

ad