புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 செப்., 2013

தேமுதிக, மதிமுவை பாஜக கூட்டணிக்கு அழைக்கும்முயற்சிக்கு ஆதரவளிக்கிறோம்: இல.கணேசன்

 பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் இல. கணேசன் 
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்,

’’பாராளுமன்ற தேர்தலில் தேசிய அளவில் 3-வது அணி அமைய வாய்ப்பில்லை. நரேந்திரமோடி பிரதமராவது காலத்தின கட்டாயம். கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தபிறகு நாடு முழுவதும் இளைஞர்களிடையே எழுச்சி ஏற்பட்டு உள்ளது. 

மோடி என்பது அனைவருக்கும் தெரிந்த பெயராக வீட்டுக்கு வீடு பேசப்பட்டு வருகிறது. தி.மு.க. இருக்கும் அணியில் அ.தி.மு.க. இருக்காது. கம்யூனிஸ்டு இருக்கும் அணியில் மம்தா இருக்கமாட்டார். முலாயம்சிங் இருக்கும் அணியில் மாயாவதி இருக்கமாட்டார். அதனால் பாராளுமன்ற தேர்தலில் 3-வது அணிக்கு சாத்தியமில்லை. 

தவறுக்குமேல் தவறுகள் செய்து வருவதால் மக்கள் வெறுப்படைந்து காங்கிரஸ் அல்லாத ஆட்சி அமைய முடிவெடுத்து விட்டனர். அது நரேந்திரமோடி தலைமையிலான அரசு தான். திருச்சியில் வருகிற 26-ந்தேதி நடைபெறும் இளத்தாமரை மாநாட்டில் மாலை 3 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கி 7 மணிக்கு நிறைவடையும். 

இதில் அகில இந்திய இளைஞரணி தலைவர் அனுராத்தாக்கூர், அகில இந்திய பொது செயலாளர் முரளிதர்ராவ், கட்சியின் தலைவர் ராஜ்நாத்சிங் ஆகியோர் பேசிய பின் நரேந்திரமோடி இளைஞரணி மாநாட்டு தலைமை உரையாற்றி பாராளுமன்ற தேர்தல் பிரச்சார தொடக்கமாக உரையாற்றுவார். 

தேசிய நலனில் அக்கறை உள்ள தமிழருவி மணியன் போன்றவர்கள் தே.மு.தி.க., ம.தி.மு.க. ஆகிய கட்சிகளை ஒன்றிணைத்து பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைக்க முயற்சி மேற்கொள்வதை பாரதீய ஜனதா ஆதரிக்கிறது. 

அமெரிக்காவில் நடைபெற்ற அழகிப் போட்டியில் இந்திய வம்சா வழியை சேர்ந்த ஒரு பெண் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டதை அந்நாட்டினர் ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரு அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவரை ஏற்றுக்கொள்ள அமெரிக்கர்கள் மறுக்கும் நிலையில் அந்நிய நாட்டை சேர்ந்த சோனியாவை பிரதமராகவோ அல்லது அரசுக்கு தலைமை வகிக்கவோ எப்படி நாம் ஏற்றுக் கொள்ள முடியும்’’என்று கூறினார்.

ad

ad