புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 செப்., 2013

ஜனநாயக கட்சி வேட்பாளர் இனம் தெரியோரால் மிரட்டல்.|

ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஒருவர் தமக்கு இனந்தெரியாத
நபர்களினால் உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் தனது பாதுகாப்பை உறுதிப்படுத்தித் தரக்கோரி யாழ் . மாவட்டத் தேர்தல் அலுவலகத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை எழுத்துமூலம் முறைப்பாடொன்றினைப் பதிவு செய்துள்ளார் என யாழ் . மாவட்ட தேர்தல் இணைப்பு மையம் தெரிவித்தது .
இவ்விடயம் தொடர்பாக மையம் மேலும் தெரிவிக்கையில் ,
சரத்பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஒருவர் கடந்த மாதம் 19 ஆம் திகதி மானிப்பாய் சந்தியில் அமைந்துள்ள ஜனநாயகக் கட்சியின் பிரசார அலுவலகத்தில் இருந்தபோது இரவு 8,05 மணிக்கு இனந்தெரியாதோரினால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து குறித்த வேட்பாளரினால் மானிப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது .
தாக்குதல் நடத்திய இனந்தெரியாத நபர்கள் தொடர்பாக காவல் துறையினர் விசாரணைகள் மேற்கொண்டுவரும் நிலையில் குறித்த வேட்பாளர் தமக்குத் தொடர்ந்தும் உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்பு ஏற்படுத்தித் தரக்கோரி யாழ் . மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் முறைப்பாட்டை மேற்கொண்டுள்ளார் .
யாழ் நிருபர் .

ad

ad