விருதுநகர் மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிப்பு: வைகோ தகவல்!
விருதுநகரில் நடக்கும் ம.தி.மு.க. மாநாட்டில், கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.
ம.தி.மு.க. தேர்தல் நிதியளிப்பு கூட்டம் வேலூரில் இன்று நடந்தது.
இதில் பங்கேற்க வந்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறும்போது, ''விருதுநகரில் வருகிற 15 ஆம் தேதி ம.தி.மு.க. மாநாடு நடக்கிறது. எங்கள் கட்சி நேர்மையாக உள்ளதால் பல லட்சம் மக்கள் விருதுநகரில் கூடுவார்கள்.
இந்த மாநாட்டில் ம.தி.மு.க. எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என்பது குறித்து அறிவிக்கப்படும். விரைவில் அகில இந்திய அளவில் அரசியல் மாற்றம் ஏற்படும்.
இதனை மத்திய அரசு தாக்கல் செய்ததா? அல்லது இலங்கை கூறியபடி தாக்கல் செய்யப்பட்டதா? என்பது தெரியவில்லை.
விலைவாசி உயர்வுக்கு காங்கிரஸ் அரசே காரணம். இதற்கு வரும் பாராளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்'' என்றார்.