புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 செப்., 2013

முல்லைத்தீவில் - வள்ளிபுணத்தில் ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கட்சி குண்டர்கள் நடத்திய தாக்குதலுக்கு ஒருவர் பலி
முல்லைத்தீவில் - வள்ளிபுணத்தில் ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கட்சி குண்டர்கள் நடத்திய தாக்குதலுக்கு இலக்காகிய குடும்பஸ்தர் உயிரிளந்துள்ளார்.
மேற்படிச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தின் பேரில் ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் 2 பேர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று மாலை 6 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் அதே இடத்தினைச் சேர்ந்த சுரேஸ் என்று அழைக்கப்படும் இராசய்யா கவிதன் (வயது 35) என்னும் 3 பிள்ளைகளின் தந்தையே மேற்படிச் சம்பவத்தில் உயிரிளந்தவர் ஆவர்.
இச் சம்பவத்தில் உயிரிளந்தவருடைய சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக புதுக்குடியிருப்பு வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

ad

ad