புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 அக்., 2013

கி.வீரமணியைத் தாக்க முயற்சி  - தமிழக அரசு சாதி வெறியர்களைக் கட்டுப்படுத்தவேண்டும் : திருமாவளவன் 
 விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில்,   ’’தமிழர் தலைவர் அய்யா கி.வீரமணி  விருத்தாசலத்தில் பொதுக்கூட்டம் ஒன்றுக்காகச் சென்ற போது அவரது
வாகனத்தை வழிமறித்து சிலர் தாக்க முற்பட்டிருக்கிறார்கள். தங்கள் சாதியைச் சேர்ந்த கடவுளை கி.வீரமணி அவர்கள் அவமரியாதை செய்துவிட்டதாகச் சொல்லி ஒரு கும்பல் திட்டமிட்டு இந்தச் செயலில் ஈடுபட்டிருக்கிறது. இப்படி ஒரு சம்பவம் நடக்கும் எனக் காவல்துறைக்கு முன்கூட்டியே தெரிந்திருந்த போதிலும் போதிய பாதுகாப்பு வழங்காமல் அலட்சியப்படுத்தியிருக்கிறது.


அய்யா கி.வீரமணியைத்தாக்க முற்பட்ட சாதிவெறியர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன். திராவிடர் கழகத்தின் சார்பில் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி தராமல் இழுத்தடித்து, பல்வேறு இடையூறுகளைச் செய்ததோடு  அய்யா வீரமணிக்கு உரிய பாதுகாப்புத் தராத விருத்தாசலம் காவல்துறை அதிகாரியின் மெத்தனப் போக்குக்கும் எனது கணடனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மனிதர்களிடையே சாதி பார்த்து அவர்களுக்கிடையே பகைமையை வளர்த்துக்கொண்டிருந்த சாதி வெறியர்கள் தமது ஆதாயத்துக்காக இப்போது கடவுளுக்கும் சாதி கற்பித்து வன்முறையைத் தூண்டு கிறார்கள்.
இதை ஆரம்பத்திலேயே அடக்கி வைக்கவேண்டியது தமிழக அரசின் பொறுப்பு. தேர்தல் நெருங்குகிற போதெல்லாம் இத்தகைய சாதிவெறி சக்திகள் ஊக்கம் பெற்று சமூக அமைதியை சீர்குலைக்க முனைவது  வழக்கம். அதைத் தமிழக அரசு வேடிக்கை பார்க்கக்கூடாது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட வர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்’’என்று வலியுறுத்தியுள்ளார்.

ad

ad