புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 செப்., 2013


பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி: ராஜ்நாத் சிங் அறிவிப்பு
 

    டெல்லியில் பாஜக ஆட்சிமன்றக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாகவும், பிரதமர் பதவி வேட்பாளர் குறித்தும்  ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. 

பாஜக ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் பாஜக பிரதமர் பதவி வேட்பாளராக நரேந்திரமோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்றும், அதற்கு கட்சி தலைவர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் பாஜக தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் கூட்டத்திற்குப் பின்னர் அறிவித்தார். அத்வானியை சந்தித்து நரேந்திர மோடி வாழ்த்து பெறுவார் என்றும் தெரிவித்தார்.

நரேந்திரமோடிக்கு, சுஷ்மா சுவராஜ், நிதின் கட்காரி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் பாஜக மூத்த தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து நரேந்திர மோடி ஆதரவாளர்கள் வெடி வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். 

இந்தக் கூட்டத்தை பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி புறக்கணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ad

ad