புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 செப்., 2013

வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் சிறப்புற நடைபெற்ற த.தே.கூட்டமைப்பின் தேர்தல் பிரசார நடவடிக்கை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட வேட்பாளரான 14ம் இலக்கத்தில் போட்டியிடும் சி.சுகிர்தனை ஆதரித்து, வடமராட்சி கிழக்கின் கிராமங்களுக்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், குறித்த கிராமங்களில் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டு இத்தேர்தலின் முக்கியத்துவம் பற்றி மக்களிடம் எடுத்தியம்பியுள்ளார்.
குறிப்பாக வடமராட்சி கிழக்கின் வளங்கொழிக்கும் கிராமங்களான மாமுனை, செம்பியன்பற்று, தாளையடி, மருதங்கேணி, உடுத்துறை, வத்திராயன், தாளையடி, மருதங்கேணி கொருக்கிளாய், ஆழியவளை, வெற்றிலைக் கேணி, கட்டைக்காடு போன்ற கிராமங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமது பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
மக்கள் இவர்களை அன்பாக வரவேற்று தமது ஆதரவை வெளிப்படுத்தினார்கள். இப்பிரசார நடவடிக்கையின் போது பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன், பருத்தித்துறை பிரதேச சபை தலைவர் பூ.சஞ்சீவன் வேட்பாளர் சு. சுகிர்தன், பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் செயற்பாட்டாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

ad

ad