புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 செப்., 2013

விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்டு, முள்ளிவாய்க்கால் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜோர்தான் கப்பல், தனியார் ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், அக்கப்பல் தற்போது இரும்புத் தேவைக்காக வெட்டப்பட்டு வருகின்றது.
விடுமுறை தினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை கப்பலை பார்க்கச் சென்ற பெருமளவான சுற்றுலாப் பயணிகள், முள்ளிவாய்க்கால் கப்பலடியில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

அக்கப்பலுக்குச் செல்லும் பாதையில் வீதித் தடையொன்று போடப்பட்டு கப்பலடிக்குச் செல்லவிடாமல் படையினர் தடைசெய்துள்ளனர்.
இத்தடை குறித்து படையினரிடம் கேட்டதற்கு, 'குறித்த கப்பலை தனியார் ஒருவருக்கு அரசாங்கம் விற்பனை செய்துள்ளதால், கப்பலில் இரும்புகள் வெட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதன் காரணமாக நேற்று முதல் கப்பலடிக்கு வருவது தடை செய்யப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகளை படையினர் திருப்பி அனுப்பி வருவதாக கூறினர்.
இக்கப்பலானது 2004ம் ஆண்டு இந்தியாவில் இருந்து அரிசியை ஏற்றிக்கொண்டு சென்றபோது சர்வதேச கடற்பரப்பில் வைத்து ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக தத்தளித்துக் கொண்டிருந்த சமயம் விடுதலைப் புலிகள் அமைப்பினால் குறித்த கப்பல் கரைக்கு கொண்டு வரப்பட்டது.
இதிலிருந்த 22 மாலுமிகள் மீட்கப்பட்டு அவர்களது நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
அன்று தொடக்கம் இக்கப்பலை பார்வையிடுவதற்கு பெருமளவான மக்கள் வந்து சென்றுள்ளனர்.
யுத்தம் நடைபெற்ற காலத்தில் முழுமையாக சேதமடைந்த இந்த கப்பல் 2009ம் ஆண்டு மே மாதம் 14ம் திகதி இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.
2009ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை இந்த கப்பல் ஒரு சுற்றுலாப் பொருளாக பொதுமக்களால் பார்க்கப்பட்டு வந்த சந்தர்ப்பத்தில் இரும்புக்காக இது தனியார் ஒருவருக்கு விற்கப்பட்டு அங்கிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ad

ad