இலங்கையின் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் கட்சிகள் வெற்றிபெற வேண்டும் என இந்திய மத்திய இணையமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் பங்கேற்பது குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கே முடிவெடுப்பார் என்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
மேலும், இலங்கை மீனவர்கள் தொடர்பில் பேச்சு நடத்த மாநில அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தெரிவித்த நாச்சியப்பன், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவதை தடுக்க முக்கிய பேச்சுவார்த்தையொன்று நடத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.