புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 செப்., 2013

பண மோசடிக் குற்றச்சாட்டில் வெருகல் பிரதேச சபை தலைவர் கைது
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த வெருகல் பிரதேசசபை தலைவர் பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தார்.
வெருகல் பிரதேச சபை தலைவர், பாடசாலை மைதானம் ஒன்றிற்கு மண் வெட்டுவதற்காக சேருநுவர பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவருடைய டிப்பர் வாகனத்தை கடந்த 2012ம் ஆண்டு வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்தியுள்ளார்.
அதற்காக பிரதேசசபை தலைவர் ஐந்து லட்சம் ரூபா பணம் செலுத்த வேண்டிய நிலையில் காசோலை ஒன்றை கொடுத்துள்ளார். அந்த காசோலை செல்லுபடியற்றதென வங்கியால் நிராகரிக்கப்பட்ட நிலையில் அந்நபர் பிரதேசசபை தலைவருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இக்குற்றச்சாட்டு தொடர்பில் பிரதேசசபை தலைவர் நேற்று கைது செய்யப்பட்டதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் மூதூர் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் இரண்டு லட்சம் ரூபா பெறுமதியான இரு சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ad

ad