ஆசியக் கோப்பை ஹாக்கி: இந்திய மகளிர் அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்
மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்று வரும் பெண்களுக்கான ஆசியக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது.
ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, இன்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் மலேசியாவை எதிர்கொண்டது. இப்போட்டியின் 39-வது நிமிடத்தில் பூனம் ராணியும், 46-வது நிமிடத்தில் லில்லி சானுவும் கோல்கள் அடித்து இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தனர். இதன்மூலம் 2 வெற்றி, ஒருதோல்வியுடன் ஏ பிரிவில் 2-ம் இடம்பிடித்த இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. சீனா முதலிடத்தில் உள்ளது.
இதேபோல் பி பிரிவில் தென் கொரியா முதலிடத்தையும், ஜப்பான் 2-ம் இடத்தையும் பிடித்து அரையிறுதியை உறுதி செய்தன.
நாளை மறுநாள் நடைபெற உள்ள அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா, தென்கொரியாவை எதிர்கொள்கிறது. மற்றொரு அரையிறுதியில், சீனா-ஜப்பான் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்று வரும் பெண்களுக்கான ஆசியக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது.
ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, இன்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் மலேசியாவை எதிர்கொண்டது. இப்போட்டியின் 39-வது நிமிடத்தில் பூனம் ராணியும், 46-வது நிமிடத்தில் லில்லி சானுவும் கோல்கள் அடித்து இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தனர். இதன்மூலம் 2 வெற்றி, ஒருதோல்வியுடன் ஏ பிரிவில் 2-ம் இடம்பிடித்த இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. சீனா முதலிடத்தில் உள்ளது.
இதேபோல் பி பிரிவில் தென் கொரியா முதலிடத்தையும், ஜப்பான் 2-ம் இடத்தையும் பிடித்து அரையிறுதியை உறுதி செய்தன.
நாளை மறுநாள் நடைபெற உள்ள அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா, தென்கொரியாவை எதிர்கொள்கிறது. மற்றொரு அரையிறுதியில், சீனா-ஜப்பான் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.