மகிந்த நாடு திரும்பியதும் முக்கிய முடிவு ; விக்னேஸ்வரனுடன் சந்திப்பு
ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நாடு திரும்பியதும், முக்கியமான பல முடிவுகளை எடுக்கவுள்ளதாக, கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மகிந்த ராஜபக்ச கொழும்பு திரும்பியதும், வடக்கு மாகாண முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள, ஓய்வுபெற்ற நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரனைச் சந்தித்துப் பேச்சு நடத்துவதற்கு உறுதியான வாய்ப்புகள் உள்ளதாக, சிறிலங்கா சுதந்திரக் கட்சி உயர்மட்ட வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அத்துடன் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தை அடுத்த மாதம் முதல் வாரத்தில் கூட்டி, அவர் முக்கிய முடிவுகளை எடுக்கவுள்ளார்.
மாகாணசபைத் தேர்தல் முடிவுகள், மாகாணசபைகளுக்கான முதலமைச்சர்கள், குறித்தும் அவர் முடிவுகளை எடுக்கவுள்ளதாகவும் கொழும்பு நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.