புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 செப்., 2013

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வெற்றிக்கு உதவுங்கள்- British Tamil Conservatives

தமிழ் மக்கள் சம உரிமை பெற்ற விடுதலை பெற்ற சமூகமாக வாழ வேண்டும் என்ற நிலைப்பாட்டை கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடமாகாணசபை தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தமிழ் மக்கள் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என பிரித்தானியாவில் உள்ள பிரிட்டிஷ் தமிழ்
கொன்சேர்வேடிவ்ஸ் British Tamil Conservatives  இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சர்வதேசத்தின் அழுத்தத்தின் காரணமாக சிறிலங்கா அரசுத்தலைவர் மகிந்த ராசபக்ச வடமாகாணசபை தேர்தலை நடத்த முன்வந்துள்ளார்.
தமிழ் மக்கள் தமது ஜனநாயக வழியில் தமது விருப்பத்தை வெளிப்படுத்துவதற்கு இந்த தேர்தலை பயன்படுத்த வேண்டும். வடமாகாணசபை தேர்தலில் தமிழ் வழங்கப்போகும் தீர்ப்பை பிரித்தானியா உட்பட சர்வதேசம் எதிர்பார்த்துள்ளது.
இந்நிலையில் நீதியான தேர்தல் ஒன்றை சிறிலங்கா அரசாங்கம் நடத்துமா என்ற சந்தேகமும் தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே பிரித்தானியா அரசாங்கம் தமது பிரதிநிதிகளை அங்கு அனுப்பி வடமாகாணசபை தேர்தலில் தமிழ் மக்கள் சுதந்திரமாக வாக்களிப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்றும் பிரிட்டிஷ் தமிழ் கொன்சேர்வேடிவ்ஸ் கேட்டுள்ளது.
இலங்கையில் தமிழ் மக்களுக்கு தலைமை தாங்க கூடிய ஒரே தலைமையாக தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பே உள்ளது. எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடமாகாணசபையில் வெற்றி பெற வேண்டியது அவசியமாகும். இந்த வெற்றியை உறுதிப்படுத்துவதற்கு புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்கள் தமது உறவுகளுக்கு இதனை தெளிவு படுத்தி தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களிக்குமாறு தூண்ட வேண்டும் என்றும் அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

ad

ad