புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 அக்., 2013

2வது திருமண விவகாரம் : நடிகை சரிதா புகாருக்கு நடிகர் முகேஷ் பதில்
நடிகர் முகேஷ் கேரளாவை சேர்ந்த நடனக்கலைஞர் தேவிகாவை கடந்த வாரம் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். கொச்சியில் உள்ள ரிஜிஸ்டர் அலுவலகத்தில் அவர்கள் பதிவு திருமணம்
செய்து கொண்டனர். இது காதல் திருமணம் ஆகும். இந்த திருமணத்துக்கு முகேசின் முதல் மனைவியான நடிகை சரிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.


இது குறித்து சரிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’முகேஷ் சட்ட விரோதமாக தேவிகா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக அறிந்தேன். அவருக்கும் எனக்கும் இதுவரை சட்டப்படி விவாகரத்து நடக்கவில்லை. 2007–ம் ஆண்டு முதல் அவரை விவாகரத்து செய்ய தயாராக இருந்து வருகிறேன். ஆனால் தட்டிக்கழித்தே வந்தார். ஷர்வன், தேஜஸ் என்ற இரு மகன்களும் என்னுடன்தான் இருக்கிறார்கள்.
விவாகரத்து பெறாமல் முகேஷ் இரண்டாம் திருமணம் செய்து இருப்பது என்னை பாதித்து உள்ளது. அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்’’ என்று குறிப்பிட்டு உள்ளார்.
சரிதா குற்றச்சாட்டுகளை முகேஷ் மறுத்துள்ளார். அவர் தரப்பில், ’’சரிதா குற்றச்சாட்டுகள், முற்றிலும் தவறானவை. தேவிகாவை முகேஷ் சட்டப்படி பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளார். சரிதாவை சட்டரீதியாக பிரிந்ததற்கான அனைத்து ஆவணங்களையும் ரிஜிஸ்டர் அலுவலகத்தில் அதிகாரியிடம் தாக்கல் செய்துள்ளார்.
தேவையான தஸ்தாவேஜுகளை ஒப்படைக்காமல் இருந்து இருந்தால் திருமணத்தை அதிகாரி நடத்தி வைத்து இருக்கமாட்டார்’’என்று கூறியுள்ளனர்.

ad

ad