புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 அக்., 2013

கள்ளக்காதலுடன் குடும்பம் நடத்துவதற்கு ஒரு லட்சம் ரூபாய் கட்டணம்
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தை அடுத்த கொல்லிமலை, பைல் நாட்டை சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி ராஜாமணி, வயது-35.  இவர்களுக்கு, இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.



ராஜேந்திரன், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். அதை தொடர்ந்து, அவரது மனைவி ராஜாமணிக்கும், அதே ஊரை சேர்ந்த மாட்டு வியாபாரி சின்னுசாமிக்கும் பழக்கம் ஏற்பட்டு, பிறகு கள்ளக்காதலாக மாறி இருவரும் சேர்ந்து குடும்பம் நடத்தி வந்தனர்.


இந்நிலையில், உள்ளூரில் உள்ள சிலர் ஊர் கட்டுப்பாட்டை மீறி "சின்னுசாமி ராஜாமணியின் வீட்டுக்கு வந்து செல்வதற்கு, ஒரு லட்சம் ரூபாய், ஊர் மக்களுக்கு “தண்டமாக” தரவேண்டும்' என, ராஜாமணியிடம், சிலர் கேட்டுள்ளனர்.


இதை தொடர்ந்து, தன்னிடமிருந்த 14,000 ரூபாயை, ராஜாமணி தண்டமாக கொடுத்தார். நேற்று, மீதித் தொகையை ஊர் மக்கள் கேட்டுள்ளனர், அப்போது, ஊர் மக்களுக்கும், ராஜாமணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த ஊர் மக்களில் சிலர் ராஜாமணியை சரமாரியாக தாக்கியுள்ளனர்.



இதில், படுகாயம் அடைந்த ராஜாமணியை, அருகில் இருந்தவர்கள் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக செர்த்துள்ளனர். இதுகுறித்து, வாழவந்திநாடு போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

ad

ad