புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 அக்., 2013

இயந்திர கோளாறுக்கு உள்ளான படகில் இருந்த 70 பேரை கடற்படையினர் காப்பாற்றினர்
இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையில் உள்ள கடற்பரப்பில் இயந்திர கோளாறுக்கு உள்ளான படகில் 70 பேர் இருந்ததாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
அந்த படகில் இருந்தவர்கள் கடற்படையினரால் நேற்றிரவு காப்பற்றப்பட்டனர். இவர்கள் சட்டவிரோதமாக வெளிநாடு நோக்கி பயணித்து கொண்டிருந்தனர்.
இடையில் படகில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக படகு நடு கடலில் தத்தளித்து கொண்டிருந்தது.
சம்பவம் குறித்து கிடைத்த தகவலை அடுத்து கடற்படையின் சாகர கப்பலில் அங்கு சென்ற கடற்படையினர் அதில் இருந்தவர்களை காப்பற்றியுள்ளனர்.
படகில் இருந்தவர்களில் 13 சிறுவர்களும் 13 பெண்களும் அடங்குகின்றனர். இவர்கள் இலங்கையின் கல்பிட்டி பிரதேசத்தில் இருந்து கடந்த 26ம் திகதி புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
இவ்வாறு காப்பாற்றப்பட்ட 70 பேரில் 67 பேர் தமிழர்கள், 2 முஸ்லிம்கள் மற்றும் ஒரு சிங்களவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் இன்று மாலை காலி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட உள்ளதாக கடற்படையின் பேச்சாளர் கமாண்டார் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.

ad

ad