புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 அக்., 2013

மட்டக்களப்பில் கடனை திரும்ப செலுத்த முடியாத பெண்களிடம் பாலியல் இலஞ்சம் கோரும் அதிகாரிகள்!- அதிர்ச்சி தகவல்
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுயதொழில் செய்ய கடனை வழங்கும் நிறுவனங்களின் அதிகாரிகள் கடனை திருப்பிச் செலுத்த முடியாத பெண்களுக்கு பாலியல் ரீதியான தொல்லைகளை கொடுப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன என்று அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
ஒன்றியத்தின் மாதாந்த கூட்டத்தி்ல் பெண்கள் அமைப்பு இந்த பிரச்சினைகளை முன்வைத்ததாக அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியத்தின் தலைவர் வீ.கமலதாஸ் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அதிகாரிகள் இரவு 10 மணி கடந்த பிறகும் கடன்பெற்றவர்களின் வீடுகளுக்கு செல்வதாக அவர் கூறினார்.
இந்த நிலைமையில் கடனை பெற்ற பெண்கள் இரவு நேரத்தில் வீடுகளில் தங்கியிருக்க அச்சப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
போருக்கு பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச மற்றும் தனியார் துறைகளை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட நிதி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
அதேவேளை அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியம் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் இலங்கை மத்திய வங்கிக்கு அறிவித்துள்ளதாகவும் மேலதிக தகவல்களை வெளியிட ஒரு வார கால அவகாசம் தேவை எனவும் மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் பீ.எம்.ஏ.எஸ்.சார்ள்ஸ் வெளிநாட்டு ஊடகம் ஒன்றிடம் கூறியுள்ளார்.

ad

ad