புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 அக்., 2013

ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கு நவ.21க்கு ஒத்திவைப்பு: பெங்களூரு சிறப்பு கோர்ட்
பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் 30.10.2013 புதன்கிழமை ஆஜராக வேண்டும் என்று சிறப்பு
நீதிமன்ற நீதிபதி முடிகவுடர் உத்தரவிட்டிருந்தார். ஆனால் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று ஜெயலலிதா உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதிகள் பி.எஸ்.சவுகான், எஸ்.ஏ. பாப்டே ஆகியோர் முன்பு 29.10.2013 செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது ஜெயலலிதா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருவதால், ஜெயலலிதா பெங்களூரு செல்ல முடியாது. எனவே நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து ஜெயலலிதாவுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கூறினார். 
நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து ஜெயலலிதாவுக்கு புதன்கிழமை மட்டும் விலக்கு அளிப்பதாகவும், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் புதன்கிழமை பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். 
ஜெயலலிதாவிற்கு சுப்ரீம் கோர்ட் விலக்கு அளித்ததை அடுத்து அவர் தவிர சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் கோர்ட்டில் ஆஜரானார்கள். இந்த வழக்கின் விசாரணையை வரும் நவம்பர் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்து பெங்களூரு சிறப்பு கோர்ட் உத்தரவிட்டது.

ad

ad