புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 அக்., 2013

முல்லைத்தீவில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வீட்டை வெடி வைத்து தகர்த்துள்ள படையினர்
முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் பயன்படுத்தியதாக கூறப்படும் நிலத்தடி வீடு இராணுவத்தினரால் இன்று மாலை தகர்க்கப்பட்டிருப்பதாக முல்லைத்தீவிலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேற்படி வீடு, விடுதலைப் புலிகள் பயன்படுத்திய பதுங்கு குழிகள் மற்றும் வீடுகள் யுத்தத்தின் பின்னர் போர் நினைவுச் சின்னங்களாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
இந்நிலையில் பெருமளவு சிங்கள மக்கள் மற்றும் வெளிநாட்டவர்கள், புலிகள் அதியுச்ச போர் மற்றும் போருக்கான தந்திரோபாயங்களை கண்டு வியந்திருந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த இடங்களுக்குச் செல்லவோ, பார்வையிடவோ படையினரால் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
இதற்கு இந்தப் பகுதிகளில் கண்ணிவெடிகள் அகற்றப்படுவதாக காரணம் காட்டப்பட்டிருந்த நிலையில் இன்று மாலை குறித்த பிரதேசத்தில் மிகப் பெரும் வெடிச்சத்தம் கேட்டதாக மக்கள் கூறினர்.
இதனையடுத்து ஆராய்ந்தபோது, வெடிச்சத்தத்தின் பின்னர் பாரிய புகை மூட்டம் மேற்குறித்த வீடு அமைந்துள்ள பகுதியிலிருந்து எழுந்ததாக புதுக்குடியிருப்பு- ஒட்டுசுட்டான் வீதியில் பயணித்தவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
இதனடிப்படையில் குறித்த வீடு தகர்க்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
(2ம் இணைப்பு)
புலிகளின் தலைவரின் வேனாவில் வீடு பாரிய சத்தத்துடன் சற்று முன்னர் தகர்ப்பு
விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் சரித்திர முக்கியத் துவம் வாய்ந்த இடம் திட்டமிட்ட வகையில் இலங்கை இராணுவத்தால் தகர்ப்பு
புதுக்குடியிருப்பிற்கும் ஒட்டிசுட்டானுக்கும் இடையில் வேனாவில் பகுதியில் அமைந்திருந்த விடுதலைப்புலிகளின் தலைமை வசித்ததாகக் கூறப்பட்டதுடன் விடுதலைப் புலிகளின் காலத்தில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாகவும் கருதப்பட்ட இடம் இன்று மாலை 6.40 மணியளவில் இலங்கை இராணுவத்தால் திட்டமிட்ட வகையில் குண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது.
இவ் விடு புலிகளின் தலைவர் வசித்ததற்கான பல ஆதாரங்கள் உள்ளதுடன் நிலத்திற்குக் கீழ் மூன்று மாடிகளைக் உடைய கட்டமைப்பில் உள்ள மிகவும் விசித்திரக் கட்டமைப்பான வீடாக மக்கள் கூறுகின்றனர்
இச்சம்பவம் இடம் பெறுவதற்கு முன்னதாக 5.30 மணியளவில் இவ் வீட்டை அண்டியிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டதுடன் இச்சம்பவம் இடம் பெற்ற வேளை மக்களை வீடுகளுக்குள் முடக்கி வைத்து விட்டு இவ்வாறான வேலைகளில் இராணுவத்தினர் ஈடுபட்டதாக கூறும் எமது பிராந்திய செய்தியாளர் வெளி மாவட்ட மக்கள் பலர் இவ்விடத்ததை அண்மைக்காலத்தில் பார்வையிடுவது அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் விடுதலைப் புலிகள் மீதான அனுதாபம் தென்னிலங்கையில் அதிகரிப்பதாகவும் அதனால் இச் செயற்பாட்டை செய்ததாக பெயர் குறிப்பிட விரும்பாத இராணுவ அதிகாரி தெரிவித்தார்.

ad

ad