புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 அக்., 2013

யாழ்.மாவட்டத்தில் ஏழாலையைச் சேர்ந்த மாணவன் 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் முதலிடம்
நடந்து முடிந்த 2013ம் ஆண்டு தரம்- 5 புலமைப் பரிசில் பரீட்சையில் யாழ். ஏழாலை மேற்கு சைவ சன்மார்க்க வித்தியாசாலையில் கல்வி பயிலும் மாணவனான பரமானந்தம் தனுராஜ் 194 புள்ளிகளை பெற்று யாழ். மாவட்டத்தில் முதல் இடம் பெற்றுள்ளார்.
யா/ஏழாலை மேற்கு சைவ சன்மார்க்க வித்தியாசாலையை சேர்ந்த மாணவன் ஒருவன் யாழ். மாவட்டத்தில் முதலாவதாக வந்து இதுவே முதல் தடவையாகும்.
இம்முறை நடைபெற்ற புலமை பரிசில் பரீட்சையில் குறித்த பாடசாலையில் 23 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.
இதேவேளை, யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரி மாணவன் முகுந்தன் மிதுலன் 193 புள்ளிகளைப் பெற்று யாழ் மாவட்டத்தில் இரண்டாம் இடத்தினையும், அளவெட்டி அருணோதயா கல்லூரி மாணவி உதயகுமார் கம்சாயினி 191 புள்ளிகளை பெற்று மூன்றாம் இடத்தினை பெற்றுள்ளனர்.

ad

ad