புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 அக்., 2013

ஜாமீனில் வெளியே வந்த ரவுடி கழுத்தறுத்துக் கொலை: முதல்வர் வீட்டின் அருகே கொலை நடந்ததால் பரபரப்பு
புதுச்சேரியில் முதல் அமைச்சர் ரங்கசாமியின் வீட்டின் அருகில் ரவுடி ஒருவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


காரைக்காலைச் சேர்ந்த சாராய வியாபாரி ராமு கடந்த சில நாட்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த புதுச்சேரியைச் சேர்ந்த சசிகுமார், 20 நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார். இதனிடையே முதல் அமைச்சர் ரங்கசாமி வீட்டின் அருகே தனது நண்பர்களுடன் நேற்று இரவு முழுவதும் மது அருந்திக்கொண்டிருந்தார் சசிகுமார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சசிகுமாரை கழுத்தை அறுத்து கொலை செய்தனர். 
இதுகுறித்த தகவல் கிடைத்ததும் போலீசார் சசிகுமார் உடலை கைப்பற்றி, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ad

ad