புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 அக்., 2013

யாழில் இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!
யாழ்ப்பாணம், பளை, போக்கறுப்பு பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த இளம் குடும்பஸ்தர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அங்கு ரக்டர் கழுத்தில் ஏறியநிலையிலேயே சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வடமராச்சி கிழக்கு மருதங்கேணியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான  25 வயதான செல்வராஜசிங்கம் கஜந்தன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று காலை வயலை உழச் சென்ற நிலையிலே இன்று காலை அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ad

ad