புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 அக்., 2013

வடமாகாண சுகாதாரத்துறை அபிவிருத்திக்கான திட்டமிடலில் பொதுமக்களின் கருத்துக்கள் உள்வாங்கப்படும்!– சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம்
வடமாகாணத்தின் சுகாதாரத்துறை அபிவிருத்திக்கான திட்டமிடலின் போது பொதுமக்களின் கருத்துக்கள் உள்வாங்கப்படுமென்று வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்தார்.
அண்மையில் வவுனியா கோவில்குஞ்சுக்குளம் பகுதியில் பொதுமக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்ட போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
வவுனியா மாவட்டத்தின் வடக்கு பிரதேசம் மற்றும் பாலமோட்டை பகுதிகள் கடந்தகால யுத்தத்தினால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரம் உட்பட ஏனைய அடிப்படைத் தேவைகள் உடனடியாக பூர்த்தி செய்ய வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.
அதேவேளை, மக்களுக்கான சுகாதார அபிவிருத்தி தொடர்பான திட்டமிடலானது அவசர, இடைக்கால மற்றும் நீண்ட கால நோக்கில்,  மூன்று கட்டங்களாக மேற்கொள்ளப்படுமெனவும் இதன்போது பொதுமக்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுமெனவும் தெரிவித்தார்.
இதன்போது மக்களால் பின்வரும் பிரச்சினைகள் அமைச்சரிடம் முன்வைக்கப்பட்டன.
தங்களுடைய பிரதேசத்தில் வைத்தியசாலை வசதிகள் இல்லையெனவும் இதற்காக 25 கி.மீற்றருக்கு அப்பாலுள்ள ஓமந்தை வைத்தியசாலைக்கே செல்ல வேண்டியுள்ளதாகவும் இதற்கான போக்குவரத்து வசதிகள் குறைவாக காணப்படுவதாகவும் தெரிவித்தனர்.
எனவே தங்கள் பகுதியில் வைத்தியசாலை வசதிகள் ஏற்படத்தப்பட வேண்டுமெனவும் கேட்டுக் கொண்ட அவர்கள் தமது பிரதேசத்திலுள்ள குஞ்சுக்குளம் பாடசாலை அதிபர் இல்லாமல் பலகாலமாக இயங்குவதாகவும் உடனடியாக அதிபர் ஒருவரை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டனர்.
மேலும் கருத்து தெரிவித்த மக்கள் இடம்பெயர்வுக்கு பின்னரான மீள்குடியேற்றத்தின் போது வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட விவசாயக் கடன் சென்ற வருடம் பயிர்கள் அழிவுற்றதால் கடனை மீள செலுத்துவதில் தாம் பிரச்சினைகளை எதிர்நோக்குவதாகவும் எனினும் வங்கிகள் தங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதால் வங்கிக் கடன் மீள செலுத்துவதில் விளக்களிக்க வேண்டுமெனவும் இல்லாதுவிடின் தமக்கு கால அவகாசம் வழங்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டனர்.
நாட்டின் அசாதாரண சூழ்நிலை நிலவிய போது தங்கள் பகுதியில் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தினால் நடாத்தப்பட்ட நடமாடும் வைத்திய சேவையில் தொண்டர்களாக பலவருடங்கள் பணியாற்றி இளைஞர் யுவதிகள் தற்போது வேலைவாய்பின்றி இருப்பதாகவும் எதிர்காலத்தில் சுகாதாரத் துறையில் நியமனங்கள் வழங்கப்படும் போது தகுதியானவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த சுகாதார அமைச்சர் அவர்கள் இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுப்பதாகவும் இப்பகுதியில் வைத்தியசாலைக்கான தேவையுள்ளதை தான் ஏற்றுக் கொள்வதாகவும் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் தெரிவித்தார்.

ad

ad