புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 நவ., 2013

கொழும்பு மாநாடு! தமிழர்கள் உணர்வுகளை கருத்திற்கொண்டு தமது முடிவு அமையும்!- இந்திய பிரதமர்
இலங்கையின் பொதுநலவாய மாநாட்டில் தாம பங்கேற்பது குறிதது உரிய நேரத்தில் முடிவெடுக்கப்படும் என்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
தம்மை நேற்று சந்தித்த மத்திய கப்பல்துறை அமைச்சர் ஜி கே வாசனிடம் மன்மோகன் சிங் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
தமிழக மக்களின் உணர்வுகள் மற்றும் தமிழக சட்டசபையின் தீர்மானம் என்பவற்றை கருத்திற்கொண்டு தமது முடிவு எடுக்கப்படும் என்றும் மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் விரைவில் அதிகாரிகள் மட்ட கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளதாகவும் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
இந்த தகவல்களை இன்று அமைச்சர் ஜி கே வாசன் தெ ஹிந்து செய்திதாளுக்கு வெளியிட்டுள்ளார்.

ad

ad