புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 அக்., 2013

கனடாவின் தூதுவரை அழைத்து விளக்கம் கோர அரசு தீர்மானம் : அமைச்சர் கெஹலிய

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வதில்லை என்று கனடா தெரிவித்துள்ளமை மற்றும் இலங்கை தொடர்பில் வெளியிட்டுள்ள கருத்துக்கள் குறித்து
இலங்கையில் உள்ள கனேடிய தூதுவரை அழைத்து விளக்கம் கோருவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்று அமைச்சரவை பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

இது தொடர்பான நடவடிக்கைகளை வெளிவிவகார அமைச்சு விரைவில் மேற்கொள்ளும். பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வதில்லை என்ற கனடாவின் தீர்மானம் தொடர்பில் இலங்கை கவலையடைகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஊடகத்துறை அமைச்சில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு தகவல் வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்த நிலைப்பாட்டு விடயத்தில் கனடா தனிமையடைந்துவிட்டது என்றே கூறவேண்டியுள்ளது. காரணம் இலங்கை மாநாட்டில் கலந்துகொள்ளாமல் இருப்பதற்கான இந்த முடிவுக்கு மேலும் பல நாடுகளை இழுத்துப்போடுவதற்கு கனடா முயற்சித்தது. ஆனால் அந்த முயற்சி எடுபடவில்லை. இது விடயத்தில் கனடா தனிமையடைந்துவிட்டது என்றே கூறவேண்டும்.

கனடாவின் இந்த தீர்மானம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் கவலையடைகின்றது. மேலும் இந்த தீர்மானத்துக்காக கனடா முன்வைக்கும் தர்க்கங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியவை அல்ல. எவ்வாறெனினும் பெரும்பான்மையான நாடுகள் எமக்கு ஆதரவு வழங்குகின்றமை தொடர்பில் மகிழ்ச்சியடைகின்றோம்.

வெளிவிவகார அமைச்சு விரைவில் கனேடிய தூதுவரை அழைத்து விளக்கம் கோரும். இது தொடர்பான நடவடிக்கைகள் சில தினங்களில் முன்னெடுக்கப்படும்.

ad

ad