புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 நவ., 2013

சிறையில் நெடுமாறனை சந்திக்க அனுமதி மறுப்பு: 1½ மணி நேரம் காத்திருந்த சீமான் ஏமாற்றம்!
திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ள பழ.நெடுமாறனை சந்திக்க சீமானுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், அவர் 1½ மணி நேரம் சிறைவாசலில் காத்திருந்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பினார்.
தஞ்சையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியான பூங்கா மற்றும் சுற்றுச்சுவர் ஆகியவை ஆக்கிரமிப்பு இடத்தில் இருப்பதாக கூறி நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன் இடித்து அகற்றினர்.
அதிகாரிகளின் நடவடிக்கையை தடுக்க முயன்ற தமிழர் தேசிய இயக்கம் கட்சி தலைவர் பழ.நெடுமாறன், நாம் தமிழர் கட்சி பிரமுகர்கள் சத்தியமூர்த்தி, நல்லதுரை உள்பட 83 பேரை பொலிஸார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
பழ.நெடுமாறனை சந்தித்து பேசுவதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது மனைவியுடன் நேற்று செவ்வாய்க்கிழமை திருச்சி மத்திய சிறைச்சாலைக்கு சென்றார்.
சிறை விதிமுறைப்படி பொதுவாக செவ்வாய்க்கிழமை அன்று, விசாரணை கைதிகள் யாரையும் வெளியாட்கள் பார்ப்பதற்கு அனுமதி கிடையாது என்று சிறைத்துறை அதிகாரிகள் கூறி அனுமதி மறுத்தனர்.
சிறப்பு அனுமதி பெறுவதற்காக வழக்கறிஞர்கள் எடுத்த முயற்சியும் தோல்வி அடைந்தது. சீமான் கொண்டு சென்ற பழங்களும் உள்ளே கொடுக்க அனுமதிக்கப்படவில்லை.
இதனால் சிறை வாசலில் சுமார் ஒன்றரை மணி நேரம் காத்திருந்த சீமான் ஏமாற்றத்துடன் திரும்பினார்.
இதுபற்றி சீமான் நிருபர்களிடம் கூறுகையில்,
உயர் அதிகாரிகளிடம் பேசியபோது பார்க்கலாம் வாருங்கள் என்றனர். அதன் அடிப்படையில் தான் வந்தோம். ஆனால் இப்போது அனுமதி மறுக்கப்படுகிறது. பொதுவாக எங்கள் விஷயத்தில் பொலிஸார் எப்போதுமே மிகவும் நேர்மையாகவே நடந்து கொள்வார்கள். இப்போதும் அது தான் நடந்து உள்ளது என்றார்.

ad

ad