புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 நவ., 2013

வடக்கு அதிவேக வீதியின் நிர்மாணப் பணிகள் ஜனவரியில் ஆரம்பிக்கப்படும்!
வடக்கு அதிவேக பாதையின் நிர்மாணப் பணிகள் 2014ம் ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படும் என பெருந்தெருக்கள், துறைமுகம் மற்றும் கப்பல்துறை அமைச்சின் செயலாளர் ரஞ்சித் பிரேமசிறி தெரிவித்தார்.
நான்கு கட்டங்களாக நிர்மாணிக்கப்படும் இந்த வீதியின் முதல் கட்டப் பணிகள் ஹெண்டரமுல்லையில் இருந்து மீரிகம வரை நிர்மாணிக்கப்படும்.
இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகள் குருணாகலில் இருந்து நிர்மாணிக்கப்பட உள்ளதுடன், மூன்றாம் கட்டம் பணிகள் மீரிகமவில் இருந்து கண்டி வரை நிர்மாணிக்கப்படும். 4 ஆம் கட்ட நிர்மாணப் பணிகள் குருணாகலில் இருந்து தம்புள்ளை வரை நிர்மாணிக்கப்படும். இந்த பணிகள் அனைத்து ஒரே நேரத்தில் ஆரம்பிக்கப்பட உள்ளது.
அதேவேளை தென் பகுதிக்கான அதிவேக வீதியின் காலி முதல் மாத்தறை வரையான பகுதி 2014ம் ஜனவரி மாதம் திறந்து வைக்கப்படும் எனவும் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

ad

ad