புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 நவ., 2013


செனல் - 4 ஊடகக் குழுவினர் பணத்தை செலுத்தவில்லையென வாடகை வாகன சாரதி பொலிஸில் முறைப்பாடு

செனல் - 4 ஊடகக் குழுவினர் தமது வாடகை பணத்தை செலுத்தாது சென்றுவிட்டதாக வாடகை வாகனத்தின் சாரதி எஸ். கே. சஞ்ஜீவ டி சில்வா கொம்பனித்தொரு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவிக்கையில்,
நேற்று கொழும்பில் இருந்து ரயிலில் வடக்கு நோக்கி சென்ற செனல் -4 ஊடகக்குழுவினருக்கு எதிராக அனுராதபுர ரயில் நிலையத்தில் ரயிலை வழிமறித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில் அவர்களது பயணம் தடைப்படவே அவர்கள் அங்கிருந்து கொழும்பிற்கு திரும்பி வரநேரிட்டது.
அனுராதபுரத்தில் இருந்து வாடகைக்கு வாகனம் ஒன்றை அமர்த்தி அவர்கள் தம்புள்ளையிலுள்ள விடுதியொன்றில் நேற்றிரவு தங்கியுள்ளனர். இன்று காலை அங்கிருந்து கொழும்புக்கு பயணம் செய்துள்ளதுடன் சாரதிக்கான வாடகை பணத்தை செலுத்தத் தவறியுள்ளனர்.
இது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ad

ad