புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 நவ., 2013

 நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் சடலமாக மீட்பு
news
நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினருமான டானியல் றெக்சிசன் ( வயது 47) அவரது வீட்டிலிருந்து இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவரது மரணத்திற்கான காரணம் சரியாக தெரியவில்லை என்றும் எனினும் நஞ்சருந்தியே இவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இவரது சடலம் நெடுந்தீவு வைத்தியசாலையில்  வைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார்  விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை , பிரதேச சபை நிர்வாகத்துடனும் இவருக்கு முரண்பாடுகள் இருந்ததாகவும் அதன் காரணமாக கடந்த 2 மாத காலமாக இவர் சபைக்கு சமூகம் தரவில்லை என்றும் தகவல்கள்  தெரிவிக்கின்றன.

மேலும் அவரது இடத்தை நிரப்புவதற்கான வேற ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள்  வெளியாகியுள்ளன. அதன்படி இவரது தற்கொலைக்கு இவையும் காரணமாக அமையலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்படுகின்றது.

ad

ad