புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 நவ., 2013

குருதியை உறைய வைக்கும் கடும் குளிரில் பரமேஸ்வரன் பட்டினிப் போர்
தமிழினப் படுகொலையாளி மகிந்த ராஜபக்சவின் தலைமையில் சிங்கள தேசத்தில் நடைபெறுவதற்கு ஏற்பாடாகியுள்ள பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்க வேண்டாம் என்று பிரித்தானியப் பிரதமரை வலியுறுத்தி அவரது வாசத்தலம் முன்பாக குருதியை உறைய வைக்கும் கடும் குளிரில்
பட்டினிப் போரை சுப்ரமணியம் பரமேஸ்வரன் தொடங்கியுள்ளார்.
நேற்று மாலை 6:25 மணிக்கு இலண்டனில் உள்ள பிரித்தானியப் பிரதமரின் வாசத்தல முன்றலில் மாவீரர்களுக்கும், மானச்சாவெய்திய மக்களுக்கும் அகவணக்கம் செலுத்தி சுடரேற்றப்பட்டதை தொடர்ந்து தனது உண்ணாநிலைக் கவனயீர்ப்புப் போராட்டத்தை பரமேஸ்வரன் ஆரம்பித்தார்.
கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெறும் இடத்தில் கூடாரம் அமைப்பதற்கு இதுவரை அனுமதியளிக்கப்படாத நிலையில் கடும் குளிருக்கிடையே வீதியோர நடைபாதையில் அமர்ந்திருந்தவாறு தனது பட்டினிப் போராட்டத்தை பரமேஸ்வரன் முன்னெடுக்கின்றார்.

ad

ad