புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 நவ., 2013

யாழ்.இணுவிலில் கிணற்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்பு
இன்று அதிகாலை நித்திரையில் இருந்து எழுந்து சென்ற இளம் குடும்பப் பெண், காலையில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இணுவில் கிழக்கைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான பிரபாகரன் வித்தியா (வயது 32) என்பவரே கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
காலையில் கணவர் எழுந்து தனது மனைவியை தேடிய போது அவர்  வீட்டில் இருக்கவில்லை.
அதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள அயலவர்களிடத்தில் விசாரித்ததையடுத்து, அயலவர்களும் அவருடன்  இணைந்து தேடிய போது உரும்பிராய் கருணாகரப் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் உள்ள தோட்டக் கிணற்றில் அப்பெண சடலமாக கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சடலம் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்படடது.
சடலம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேதப் பரிசோதனைகள் நடத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொண்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ad

ad