புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 நவ., 2013

காய்கறி வெட்டும் கத்தியால்கணவன்கழுத்தறுத்துக்கொலை :
கூலிப்படையினருடன் மனைவி கைது

 கள்ளத்தொடர்பை கண்டித்ததால் போதையில் தூங்கிய கணவனை, கூலிப்படையை ஏவி கழுத்தை அறுத்து மனைவி கொலை செய்துள்ளார். மதுரவாயலில் இன்று அதிகாலை நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 


இதுதொடர்பாக மனைவி உள்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் செய்யாறை சேர்ந்தவர் ராஜ்குமார் (29), எலக்ட்ரீஷியன். மனைவி வித்யா (27). இவர்களுடைய மகள் தீபிகா (6). இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மதுரவாயல் ஆலப்பாக்கம் அஷ்டலட்சுமி நகர் 17வது தெருவை சேர்ந்த தாமோதர பாண்டியன் என்பவர் வீட்டில் வாடகைக்கு தம்பதி குடி வந்தனர். வித்யா போரூரில் உள்ள எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலை பார்த்தார். அதே  கம்பெனியில் செய்யாறை சேர்ந்த மகாலட்சுமி என்பவர் வேலை பார்க்கிறார். ஒரே ஊர்காரர்கள் என்பதால் வித்யா, மகாலட்சுமி இடையே பழக்கம் ஏற்பட்டது.



மகாலட்சுமியின் மகன் மணிகண்டன் (28). பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் வார்டு பாயாக வேலை பார்க்கிறார். அம்மா மகாலட்சுமிக்கு போன் செய்து பேசுவார். அப்போது மகாலட்சுமியிடம் போனை வாங்கி வித்யாவும் அவரிடம் பேசுவார். இந்நிலையில் வித்யா  மணிகண்டனுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டது. மணிகண்டன் போன் நம்பரை வாங்கி கொண்டு வித்யா அடிக்கடி தனியாக பேசி வந்தார். இதனால் இருவருக்கும் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது.

பெங்களூரில் இருந்து மணிகண்டன் செய்யாறு வரும் போது வித்யாவுக்கு போன் செய்து வரவழைத்துள்ளார். வித்யா கணவனிடம் பொய் சொல்லி விட்டு செய்யாறு போய் மணிகண்டனுடன் தனிமையில் இருந்து வந்துள்ளார். கடந்த 6 மாதத்துக்கு முன்பு மணிகண்டனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அப்போது மருத்துவமனையில் மணிகண்டனை, வித்யா உடன் இருந்து கவனித்தார். இந்த விவகாரம் ராஜ்குமாருக்கு தெரிய வந்தது.


மணிகண்டனுடன் உள்ள தொடர்பை விட்டு விடும்படி மனைவியிடம் கூறி சண்டை போட்டுள்ளார். போதையில் மனைவியை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.


இதுகுறித்து கள்ளக்காதலன் மணிகண்டனிடம் கூறி வித்யா அழுதுள்ளார். அதனால் மணிகண்டன் பெங்களூரில் இருந்தபடி ராஜ்குமாரை தீர்த்து கட்ட கூலிப்படையை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.
இன்று அதிகாலை 3 மணியளவில் மதுரவாயல் ஆலப்பாக்கம் சாலையில், எஸ்ஐக்கள் செபாஸ்டின், ஏழுமலை ஆகியோர் வாகன சோதனை செய்தனர். அப்போது சந்தேகப்படும்படி 2 பைக்கில் வந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் அணிந்திருந்த உடைகளில் ரத்த கறை படிந்திருந்தது. இதனால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. தீவிர விசாரணையில் அவர்கள் கிரிதரன் (28), சரவணன் (24), செந்தில் (26), பெருமாள் (22) என்பது தெரிய வந்தது. இவர்கள் கூட்டாக சேர்ந்து ஆலப்பாக்கத்தில் ராஜ்குமாரை கொலை செய்து விட்டு தப்பியது தெரிய வந்தது.
சம்பவ இடத்துக்கு 4 பேரையும் போலீசார் அழைத்து சென்றனர். அப்போது ராஜ்குமார் வீடு உள்பக்கமாக பூட்டியிருந்தது. கதவை தட்டிய போது ராஜ்குமாரின் மனைவி வித்யா ஏதும் தெரி யாதது போல் வந்துள்ளார்.

போலீசார் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது ராஜ்குமார் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். போலீசார் வித்யாவை பிடித்து விசாரித்த போது கள்ளக்காதலன் மணிகண்டன் ஏற்பாடு செய்த கூலிப்படைக்கு வித்யா உதவி செய்துள்ளார் என்பது தெரியவந்தது.
நேற்றிரவு போதையில் கணவன் தூங்கியதும் வில்லிவாக்கத்தில் தங்கியிருந்த கிரிதரன் உள்பட 4 பேருக்கும் வித்யா போன் செய்து வீட்டுக்கு வரவழைத்துள்ளார். அதிகாலை 2.45 மணியளவில்  வீட்டுக்கு வந்த கூலிப்படையினர் ராஜ்குமாரை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு பைக்கில் தப்பிய போது போலீசில் பிடிபட்டனர். வித்யாவின் கள்ளக்காதலன் மணிகண்டன், ராஜ்குமாரை தீர்த்து கட்ட பணம் தருவதாக செய்யாறை சேர்ந்த கூலிப்படை தலைவன் துரையிடம் பேசியது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக மதுரவாயல் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜ்குமாரின் மனைவி வித்யா மற்றும் கிரிதரன் (28), சரவணன் (24), செந்தில் (26), பெருமாள் (22) ஆகியோரை கைது செய்து விசாரிக் கின்றனர்.


கூலிப்படை தலைவன் துரையை பிடிக்க செய்யாறுக்கு ஒரு தனிப்படையும், மணிகண்டனை கைது செய்ய பெங்களூருக்கு மற்றொரு தனிப்படையும் விரைந்துள்ளன. கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, கள்ளக்காதலன் உதவியுடன் மனைவியே கூலிப்படையை ஏவி கொலை செய்த சம்பவம் மதுரவாயலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ad

ad