புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 நவ., 2013

பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் கைது
சென்னை, சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை முன்பு மாணவர் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கு பெறக்கூடாது என்று ஆர்ப்பாட்டம் செய்தனர். பேரணியை ஆரம்பித்து வைத்த அற்புதம்மாள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

பின்னர் திடீரென்று அந்த மாணவர்கள் மோட்டார் சைக்கிளில் பேரணியாக தஞ்சாவூருக்கு செல்ல முயன்றனர்.
இதற்காக பேரணியை தொடங்கி வைக்க ராஜீவ்காந்தி கொலையில் கைதாகி சிறையிலுள்ள பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் அங்கு வந்திருந்தார்.
உடனடியாக பொலிஸார் அற்புதம்மாள், மாணவர் கூட்டமைப்பை சேர்ந்த கார்த்திக், திருமலை உள்பட 14 பேரை திருவல்லிக்கேணி பொலிஸார் கைது செய்தனர்.

ad

ad