புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 நவ., 2013

ஹிஸ்புல்லாவின் மகனின் காம லீலைகள் அம்பலம்! 

காத்தான்குடியிலுள்ள ‘வார உரைகல்’ எனப்படும் பத்திரிகையின் பிரதம ஆசிரியரான எம்.ஐ.எம்.றஹ்மத்துல்லா (புவி) கஞ்சா வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வாரம் இவர் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் மகன் பெண்களுடன்
காமலீலையில் ஈடுபட்டிருக்கும் படங்களை தனது வாரப்பத்திரிகை யான வார உரைகல் பத்திரிகையில் வெளியிட்டிருந்தார்.
இது தொடர்பாகவும் அவர் விசாரிக்கப்பட்ட போதிலும் படங்கள் உண்மையானவை என்பதால் அவர் மீது சட்டநடவடிக்கை எடுக்க முடியாமல் போய்விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று காலை வார உரைகல் பத்திரிகையின் ஆசிரியரின் வீட்டுக்கு பொலிஸ் மோப்ப நாயுடன் சென்ற பொலிஸ், தேடுதல் நடத்தியது. இதன்போது அவரது வீட்டிலிருந்து கஞ்சா கட்டு ஒன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கைப்பற்றப்பட்ட கஞ்சா 198 கிராம் எனவும், இவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
வார உரைகல் பத்திரிகையில் வெளியிடப்பட்ட செய்தியும் படங்களும் இவைதான்
இங்கையின் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும், ஆளும்கட்சி நாடாளமன்ற உறுப்பினரும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் காத்தான்குடி மக்களால் தாஜுல் மில்லத் என பெயர் சூட்டி அழைக்கப்படும் எம் .எல் .ஏம் ஹிஸ்புல்லாஹ் வின் செல்வப் புதல்வர் ஹிராஸ் அஹ்மத் (பொறியியல் பீட மாணவர் ) வெளிநாட்டு இளம் பெண்களுடன் சல்லாபம் அனுபவிக்கும் புகைப்படங்கள் எமது இணையத்தளத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளன .
காத்தான்குடியில் மக்கள் செல்வாக்குடன் அரசியல் களத்தில் தற்போது வலம்வரும் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மார்க்க அறிஞ்சர்களின் வழிகாட்டலில் அரிசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கூறிக்கொள்ளும் இவர் கிழக்கு மாகாணத்தில் உலமாக்களுக்கான உம்முள்குறா பல்கலைக்கழகத்தையும் அமைத்துவருகிறார் இவர் மிக அன்மை காலமாக காத்தான்குடியை இஸ்லாமிய கிராமமாக மாற்றப் போவதாக கூறிக் கொண்டு அறபு எழுத்தாணிகள் கொண்ட கற்ஷிட் பங்களையும் அமைத்து வருகிறார் .
முஸ்லிம் சமூகத்தை மறைமுகமாகவும் பகிரங்கமாகவும் ஏமாற்றி வரும் இவர் காத்தான்குடி பிரதேச அபிவிருத்தியில் கொள்ளை அடித்து வருகின்ற போதிலும் இவரால் மேற்கொள்ளப்படும் அணியாங்களின் பின்னணியில் உலமாக்களும் புத்திஜீவிகளும் காத்தான்குடி சம்மேளனமும் இவருக்கு உதவிவருவது மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமூகத்தை வழிகாட்டப் புறப்பட்டுள்ள இவர் தன் மகனின் இழி செயலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் .
இவரது மகன் ஹிராஸ் அஹ்மத் முகப்புத்தகத்தில் பெண்களுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு இவரது வலையில் விழும் பெண்களுடன் கொழும்பில் உல்லாச விடுதிகளில் சல்லாபம் அனுபவித்து வருகிறார் .
இவர் பல பெண்களுடன் தொடர்பு கொண்டிருந்த போதிலும் கொங்காங் நாட்டை பிறப்பிடமாகக் கொண்ட அலானா சலேய் என்ற இப்பெண்ணுடன் பல முறை உல்லாச விடுதிகளில் உல்லாசம் அனுபவித்தாதாக தெரிய வருகிறது .
அதற்கான புகைப்படங்ககளுடன் முழுமையான ஆதாரம் கிடைக்கப் பெற்றுள்ளன இவரால் இப்பெண்களுக்கு போடப்பட்ட பாலியல் உரையாடல்கள் எம்மிடம் முழுமையாக கிடைக்கப்பெற்றுள்ளன இவை அனைத்தும் மிக விரைவில் பதி வேற்றப்படும் .
அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பொய்க்கு பெயர்போன ஒருவர் என்பது கிழக்கு மாகாண மக்களுக்கு நன்கு தெரியும் இதையும் சிலவேளை மறுக்கவும் வாய்ப்பு இருக்கிறது. Hisbulla-sonHisbulla-son-1Hisbulla-son-2

ad

ad