இசைப்பிரியாவின் கொலையில் தவிற்கமுடியாதது நியாயப்படுத்துகிறார் கருணா கருணாவின் மனைவி நிரோ என்ற வித்தியாவதி கணவன் பற்றி கூறியவை
தேச நிர்மாண அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் என்றழைக்கப்படும்கருணா தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளதாக அவரது மனைவிவித்தியாவதி தெரிவித்துள்ளார்.கருணாவின் மனைவியும் மூன்றுகுழந்தைகளும் சில வருடங்களுக்கு முன்னர் இங்கிலாந்தில் வசித்து வந்தனர்,தற்போது
ஸ்கொட்லாந்தில் வசித்து வருகின்றனர்.
ஊடக தர்மத்தின் அடிப்படையில் அவரது மனைவி வழங்கிய நான்கு மணி செவ்வியையும் பிரசூரிக்க முடியாது என பிரபல ஆங்கில இணையதளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
டக்ளஸ்சும் என்ன சொல்லுறார்….. கருணாவை பற்றிய உண்மை முகங்கள் ….
குடும்ப பிரச்சினைகளைக் கூட கதைக்க முடியாத அளவிற்கு அவர் குழப்பமான சூழ்நிலையில்காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.
வித்தியாவதி தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் பிரிவின் சிரேஸ்ட உறுப்பினர் என்பதுகுறிப்பிடத்தக்கது.
தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து பிளவடைந்த போது மிகத் தெளிவான ஓர் குறிக்கோள்காணப்பட்டதாகவும், கருணா அதனை மறந்து செயற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கருணா தனது சுயலாப நோக்கங்களுக்காக அரசாங்கத்தின் கைப்பொம்மையாக செயற்பட்டு வருவதாகஅவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கத்தின் சிரேஸ்ட அதிகாரியொருவரே கருணாவை பிழையான பாதைக்கு இட்டுச்சென்றுள்ளதாகவும், கூறுகிற போது கருணா அவரது வாக்குகளை வேத வாக்காக எண்ணிச் செயற்பட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருணா திருந்துவதற்கு ஒரு மாத கால அவகாசம் வழங்குவதாகவும், அவ்வாறு திருந்த மருத்தால்அவரது சகல ஊழல்களையும் மக்களுக்கு அம்பலப்படுத்த பின்நிற்கப் போவதில்லை என அவர்தெரிவித்துள்ளார்
பயங்கரவாத அமைப்பில் பயங்கர வாதியாக இருந்தபோது