முரளிதரன் கருத்துக்களில் பிழையில்லை!– டேவிட் கமரூன்
கிரிக்கட் வீரர் முத்தையா முரளிதரனின் கருத்துக்களில் பிழையில்லை என பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார்.
இலங்கை தொடர்பில் சிறந்த ஓர் நிலைப்பாட்டை ஏற்படுத்துவது அவரது கடமையாகும்.
இலங்கையர் என்ற ரீதியில் அவரது கருத்துக்களில் பிழையில்லை.
நாடு தொடர்பில் நன்மதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் முரளிதரன் கருத்து வெளியிட்டார்.
முரளியின் சுழற்பந்தை என்னால் சரியாக விளங்கிக் கொள்ள முடியவில்லை.
அதிர்ஷ்டவசமாக பந்துகளை மட்டையால் அடிக்கக் கிட்டியது என அவர் தெரிவித்துள்ளார்.