புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 நவ., 2013

மன்மோகன் சிங், கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கக் கூடாது! ஏழு பேர் யானை மலை மீது ஏறி போராட்டம்
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், இலங்கையில் நடைபெறும் கொமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்று வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த ஏழு பேர், மதுரையில் உள்ள  யானை மலை மீது ஏறி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
3 மணி நேரம் கடுமையாக போராடி, பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் இந்த செங்குத்தான மலை மீது இவர்கள் ஏறியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அபாயகரமான மலை என்பதால் இவர்களின் பாதுகாப்பு குறித்து பதட்டமும் ஏற்பட்டுள்ளது.
இன்று அதிகாலையில் இந்த ஏழு வாலிபர்களும் மலை மீது ஏறி, இலங்கையில் நடைபெறும் கொமன்வெல்த் மாநாட்டுக்கு பிரதமரோ அல்லது இந்தியப் பிரதிநிதிகள் யாருமோ போகக் கூடாது என்று வலியுறுத்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாவும் அவர்கள் கூறியுள்ளனர்.
பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். அவர்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

ad

ad